மௌன ராகம்

மலரும் தாமரையாய் அவள் கண்கள்
அதன் அசைவின் ஒவ்வொன்றிலும் பூட்டிக்கிடக்கும்
காதல் கவிதைகள் ஆயிரம் ஆயிரம்
அதோ அவள் அதரம் இன்னும் மலரா
இதழ்போல் .... புன்னகைக்க ....
அவள் என்னைப் பார்த்தாள்.... பேசவில்லை
பேசாவிட்டால் என்ன.... அவள் கண்களும்
மூடிய செவ்விதழும் பேசிவிட்டு .... இல்லை
மௌன காதல் ராகம் பாடிவிட்டு போனதே
என் மனதில் இன்பம் சேர்க்க

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Dec-20, 8:36 pm)
Tanglish : mouna raagam
பார்வை : 342

மேலே