சாதிகள் இல்லை
சாதிகள் இல்லையடி
பாப்பா...
பாரதியாரின் இந்த
கவி வரிகளை....!!!
பாட்டினிலும்
ஏட்டினிலும்....
தேர்தல் திருவிழா
காலங்களிலும்
காது குளிர கேட்டு
மகிழ முடியுமே தவிர...!!
மத்தபடி
இந்த கவியின்
வைர வரிகளின்
மதிப்பு என்பது
ஆண்டிகள் சேர்ந்து
மடம் கட்டிய
கதை போல்தான்...!!
--கோவை சுபா