கொடுத்தார் பூமி ஆள்வார் 👍🙏

கொடுத்துப்பார்
உன் மனம் நிறைந்திருக்கும்..
குணம் உயர்ந்திருக்கும்...

கொடுத்துப்பார் பாசம் மட்டுமல்ல கொடுத்தால் பணம் கூட பெருகும்
வாழ்வில் இன்பம் சுரக்கும்

இங்கு உன்னது
என்று ஏதும் இல்லை...
நம் உடல் அதில் உயிர்
நம் தாய் கொடுத்தது..
நம்மில் உள்ள நற்பண்பு
நம் தந்தை கொடுத்தது...
நம் மானம் காக்கும்
துணி நெசவாளி கொடுத்தது...
நம் பசி போக்கும் உணவு
விவசாயி கொடுத்தது...
நமக்கு கல்வி
நம் ஆசிரியர் கொடுத்தது...
நன்றோ... தீதோ..
நம் நட்பு கொடுத்தது..
இங்கு எல்லாம் யாரோ ஒருவர் மற்றவருக்கு கொடுத்ததே...

நம்முள் உற்று நோக்கினால் புரியும்
இங்கு எதுவுமில்லை நமது
என்று..

ஆகையால்
கொடுத்துவிடு
உன்னில் உள்ளதை இல்லாதவர்களுக்கு..

பணம் இல்லையேல்
பாசம் கொடு
அது அவர்களுக்கு
நமக்கும் கூட ஓர் நல் உறவு இருக்கு என்ற நம்பிக்கை கொடுக்கும்..

பாசம் காட்ட தெரியவில்லை எனில்
அறிவு கொடு
அது அவர்களை நெறிப்படுத்தும்...

அறிவு இல்லை எனில்
அன்பு கொடு
அது அவர்களுக்கு ஆறுதல் கொடுக்கும்...

அன்பு கூட இல்லை எனில்
அறிவுரை கொடு அது
அவர்களை வாழ்வில் முன்னேற்றும்..

கொடுதுப்பார்
உன் மனம் நிறைந்திருக்கும்..
குணம் உயர்ந்திருக்கும்...
பொறுத்தார் மட்டுமல்ல
கொடுத்தாரும் பூமி ஆள்வார்...

என்றும்...என்றென்றும்...
ஜீவன்❣️

எழுதியவர் : ஜீ வ ன்... (6-Jan-21, 5:35 am)
பார்வை : 141

மேலே