வாழ்க

புத்தாண்டின் தொடக்கத்தில்
பிறந்தநாள் காணும் தோழியே!
என்றென்றும் புதுமலராய்
வளம்வாழ வாழ்த்துக்கள்..

இங்கிவளை யான் வாழ்த்தி
சில வரிகள்...
குணசுந்தரி
பாராட்டி சீராட்டினால்
பாதைகொள்ளும் நட்பின்றி
பாதகங்கள் யாதெனினும்
பளிச்சென உரைத்திட்டு
உற்றவழி காட்டும்
உறுதிமிக்கவளே!

அகத்திலும் அழகி நீ!
மறையும் வண்ணங்களன்றி
நீங்காத நீலமாய் நீ!

நேர்பட உரைத்தல்
நட்பிற்கு சிறப்பு...
பின்மொழிதல்
வழிமொழிதலில்
வெளுத்திடும் நடப்பு!
முன்மொழியும் உன்மொழி
எப்போதும் நேர்வழி!

கொள்கைவிளக்க வரைபடமல்ல
கொண்டிடும் நட்பு...
உண்மை அன்பின் உறைவிடம்!
உன்னை உணரும் நிறையிடம்!
உணர்ந்தால் நீயும் நிறைகுடம்!
உணர்ந்தேன் நானும் உம்மிடம்!

குறைகூறும் சித்தாந்தம்
உறவோடு போகட்டும்...
கள்ளமில்லா நட்பே
காலத்தின் கை சேரட்டும்!
பால்ய காலங்களில்
வேடங்கள் இல்லை...
நாற்பதை கடந்தும்
நடிப்பாய் நீ இல்லை...
நிகழ்காலம் , எதிகாலங்களில்
நிறைவாய் நீ நீடுழி வாழ்க!

எழுதியவர் : விஜி (5-Jan-21, 1:22 am)
சேர்த்தது : krishna viji
பார்வை : 164

மேலே