காதில் வந்து கிசு கிசுத்தாள்

கவிதையின் எல்லா வரிகளிலும்
அவளே வியாபித்திருந்தாள்
கடைசிவரையில் எதை எழுதி முடிக்கலாம் என்று
வாய்விட்டுச் சொல்லி
வானத்தைப் பார்த்து யோசித்திருந்தேன்
கவிதையை முடிக்காதே என்று
காதில் வந்து கிசு கிசுத்தாள்

எழுதியவர் : கவின் சாரலன் (28-Jan-21, 10:40 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 147

மேலே