இருவிழிகள் காஷ்மீரத்து பனிநீரோடை

மாலையாக கழுத்தில் தொங்கும்
துப்பட்டாவின் அசைவில்
சோலைக் காற்று வீசுது
மௌனமாய் சிரிக்கும் புன்னகையில்
மாலை மஞ்சள் நிலா
நெஞ்சில் வந்து போகுது
மயக்கும் இருவிழிகளின் பனிப்பொழிவில்
காஷ்மீரத்து பனிநீரோடை உடைந்து
உள்ளே துள்ளி ஓடுது !

எழுதியவர் : கவின் சாரலன் (21-Feb-21, 10:28 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 80

சிறந்த கவிதைகள்

மேலே