ஐஞ்சொற்பா - 1

கோவண உடையோடு
பசிக்கொண்டோர் நிறைந்த நாடு
எண்ணிலக்க இந்தியா.

முகத்தில் மயிர்வளர்த்து
வீரம் நிறைந்தவர்கள் என்றேகூவுவோர்
நிறைந்தது தமிழ்நாடு.

இறைவன் சிலைக்கும்
மனிதர் தரிசனத்திற்கும் இடையிலே
தரகுதொகை தட்டில்.

எல்லா படிப்பும்
எல்லோரையும் அறிவாளியாய் ஆக்குவதில்லை
கல்யாண பத்திரிக்கைக்கே.

ஆனைமுக மனிதன்
ஆன்மீகத்தில் அழகிய வழிபாடு
அறிவியலுக்கு முரண்பாடு

துரித உணவுகள்
இடர்நிறைந்த நோய்க்கான காரணிகள்
நவீனத்தின் இழிநிலை.

முடியில் அலங்காரம்
அருவருக்கத்தக்க அகோரத் தோற்றம்
எல்லோராலும் ஒத்துக்கொண்டு.

இருபாலரும் சமமே
பேருந்து இருக்கையில் தனித்தனியாய்
பயந்து துர்சீண்டலுக்காக.

நெகிழியின் பயன்பாடு
நிறைந்துள்ள மக்கள் பெருக்கத்தினால்
நஞ்சென்றே தெரிந்துமே.
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (26-Feb-21, 7:12 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 36

மேலே