உனக்காக நான்
பேசாமல் இருக்கும் போது சொல்வதை
புரிந்தவள்
பேச நினைக்கும்போது எங்கேயோ மறைந்தாய்
உன் வார்த்தைகளை அவமதித்தும் என்னை மதித்தாய்
இன்று மதிக்க நினைக்கும்போது என்னை தனிமையில் விதைத்தாய்
பேசத்தெரியாத போது பேசக்கெஞ்சினாய்
இன்று கவிதை எழுதுகிறேன் காணாமல்போய்விட்டாய்
சொல்ல பயம் இருந்தபோது சொல் என்றாய் கண்களால்
சொல்ல நினைக்கும் போது நில் என்றாய் உன்னை விட்டு தூரமாய்!!!!
எப்படியோ காலம் போய்விட்டது
தேடிவருவேன் உன்னிடம் அதுவரை எப்படி பாதுகாப்பேன் இவ்வுயிரை குழப்பங்களுடன்
தனிமையில் நான்!