முரண் தொடை யமைந்த நிலைமண்டில ஆசிரியப்பா

இரவும் பகலும் இனியவள் நினைவே
பிரிவிலு முறவைப் பேணத் துடிக்கும்
ஏற்றத் தாழ்வுக ளெதுவந் தாலும்
தூற்றாது போற்றித் துயர்தணி விப்பேன் !
உள்ளும் புறமு முன்ற னன்பால்
துள்ளினும் துவண்டேன் சுகம்பெற விழைந்தேன் !
இருளி லொளியாய் இதயம் மலர்ந்தே
மருந்தாய் விருந்தாய் மகிழ்விப் பேனே !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (30-Mar-21, 6:53 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 70

மேலே