யாருக்கு யார்
முத்து முத்தாய் என்கன்னத்தில் நீயிட்ட
முத்தங்கள் உன்சிறு பாதங்களால் என்
மார்பை உதைத்தாய் அன்று குழந்தையாய்
கள்ளமேதும் இலா குழவியாய் நான்
உன்னை தூக்கி என்மார்பில் அணைத்த பொது
இன்றோ என்மார்பில் தீயல்லவோ அள்ளி
போட்டு விட்டாய் என்னிடம் சொல்லாது
என்னையும் தாயென்று மறந்து நேற்று
நீ கண்ட ஓர் உறவோடு உன்காதலனோடு
'உலகே மாயம் வாழ்வே மாயம்'
யாருக்கு யார் உறவு அறியவைத்தாய்
எந்தன் இறைவா நீ