பாதம் ரோசா யிதழதன் மென்மையே - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

பாதம் ரோசா யிதழதன் மென்மையே;
பாதந் தன்னிலே பாந்தம் கொலுசுதாம்
பாதம் பூமியில் பட்டிடும் நோவினைப்
பாதத் தில்செருப் பைப்பார்த் தணிந்திடு!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-May-21, 8:41 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 46

மேலே