காதல்

ஏதோ ஒரு புது சுகம் எனக்குள் பிறந்தது!
சொல்லவும் முடியவில்லை!
வார்த்தைகளில் எழுதவும் இயலவில்லை!
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்!
இது ஒரு வித மகிழ்ச்சியை உள்ளுக்குள் உண்டாக்குகிறது!
மழையை ரசிக்கிறேன்!
மலரை நுகர்கிறேன்!
இரவு பிடித்தது!
நிலவும் பிடித்தது!
கனவை எதிர்பார்க்கிறேன்!
கடல் அலையை ரசிக்கிறேன்!
புதிதாய் வந்த மாற்றம் என்னவென்று என்னை கேள்வி கேட்டேன்
என் மனதிடம்!

பதில் வந்தது
ஒற்றை சொல்லில்!
காதல்
என்று!

எழுதியவர் : சுதாவி (21-May-21, 6:34 pm)
சேர்த்தது : சுதாவி
Tanglish : kaadhal
பார்வை : 362

மேலே