கொலைப் படைப்பு

உறுதி மனதிலின்றி
உறவு
உறுதியாகும் முன்னே
உருவாகும் ஒத்திகைகள்..

மறைவிடங்களில்
மானிடக் குஞ்சுகளின்
அலறல் ஒலியாக
அரங்கேற்றம்..

இந்தக்
கொலைப் படைப்பின்
தலைப்பு-
தாய்மையின் தகனம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (21-May-21, 6:34 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 81

மேலே