அம்மா எங்கே
அம்மா எங்கே
தொலைவில் திருமணம் செய்ததால்
தொலைபேசியில் பேசினோம் அம்மா
வந்த அழைப்போ உன் மரணத்திற்கான
அழைப்பு என தெரியாமல் இருந்தேன் அம்மா
அன்னை ஆன தருணமும் என்
அன்னையை இழந்த தருணமும் ஒன்று
நீ இறந்த செய்தியை நெஞ்சிலே புதைத்தேன்
நீண்ட நாள் கழித்து கிடைத்த வரம் போய்விடுமோ என்று
சந்தோசம் கொள்வதா துக்கம் கொள்வதா
இதற்கு இடையில் மனம்
நீ மரணத்திருப்பாயோ இல்லை என்னை
கண்டதும் உயிர் பெருவாயோ என ஏக்கம்
பத்து மாதம் மட்டும் அல்ல கடைசிவரை என்னை
பத்திரமாக பார்த்து கொண்டாய்
தொலைவில் இருக்கின்றாய் என்று இருந்தேன்
இப்பொது என் அருகில் தான் இருக்கின்றாய்
பட்ட கஷ்டம் போதும் அம்மா இந்த ஜென்மத்தில்
பட்டு மெத்தையில் நித்திரை கொள்வாய் சொர்க்கத்தில்