உன் விழிகளின் கோவபார்வை 555
***உன் விழிகளின் கோவபார்வை 555 ***
என்னவளே...
உன் விழிகளின்
கோவபார்வை...
இன்று வீசும் கத்தரி வெயிலைவிட
கொடுமையானதடி...
நான் செய்த தவறுக்கு நீ
என்னை கண்டித்து இருக்கலாம்...
பிரிந்து செல்ல காரணம்
தேடினாயோ நீ என்னிடம்...
இனியும் நீ என் விழிகளுக்கு
விருந்து கொடுக்க போவதில்லை...
உள்ளத்தில் இருக்கும்
உன் நினைவுகளுக்கு இல்லை...
இருமல் வரும் போது நெஞ்சு
வலித்தால் துடித்துவிடுகிறேன்...
உனக்கு எங்கே
வலித்துவிடுமோ என்று...
இதயம் முழுவதும்
நிறைந்திருக்கும் உணர்வுகளில்...
நீயே
உயிர் செல்களாய்...
உனக்காக காத்திருப்பேன்
இன்னும் சில நாட்கள் மட்டும்.....
***முதல் பூ பெ.மணி.....***