நீ வந்த வேளையில்

கண்ணாடியில் உன் பிம்பம் பட்டு சில்லாகி போனது!

கார்மேக குழல் மோதி சூறாவளி என்னுள் வந்தது!

பூக்கள் எல்லாம் கூடி நின்று புது வண்ணம் தேடியது!

மூச்சு காற்று பட்டு என் வீட்டு புல்லாங்குழல் நாதம் இசைத்தது!

அசை போடும் ஆடாக அன்பே என் மனசு ஆனது!

எல்லாம் நடந்து போனது!

ஏதும் அறியாதவளாய் என் மனை பக்கம் நீ வந்து போன வேளையில்!

எழுதியவர் : சுதாவி (30-May-21, 11:45 am)
சேர்த்தது : சுதாவி
Tanglish : nee vantha veLaiyil
பார்வை : 291

மேலே