துறவி யார்

நல்லவராய் ஒழுக்க சீலராய் இருந்து
நல்லதை மட்டுமே நினைத்து நல்லதையே
எல்லோருக்கும் போதித்து நல்லதையே செய்து
வாழ்க்கையை நடத்தி வரும் சிலர்
வாழ்க்கையில் இன்பம் ஒரு இமி அளவும்
காணாது துன்பமே துரத்துவது ஏனோ
இதை அண்ணாரையே கேட்க அவர் சொல்வார்
' இது கடவுள் எனக்கு கடந்த வாழ்க்கையில்
நான் செய்த தவற்றிற்கு தண்டனையாய்
ஏற்கிறேன் ' என்றார் சாந்தமே உருவாய்

கீதையில் கண்ணபெருமான் கூறியது இப்போது
தெள்ளத் தெளிவானது பளிங்கு போல
'என்னை உணர்ந்தவன் இன்பம் துன்பம்
இரண்டிற்கும் அப்பால் வாழ்பவன் ....
உண்மைத் துறவி அவனே அறி'

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (1-Jun-21, 8:10 pm)
Tanglish : thuravi yaar
பார்வை : 80

மேலே