நன்றி சொல்வோம்

முகக் கவசமே – நமது
உயிர்க்கவசம்.
தொடர்ந்து அணிந்திடுவோம்!
தொற்றைத் தடுத்திடுவோம்!
கைகளை அடிக்கடி கழுவி,
சுத்தமாய் வைத்திருப்போம்!
ஊரடங்கே, ஒரே வழி! – நம்
உயிர் காக்கும் நல்வழி!
வீட்டில் இருந்திடுவோம்! – நோய்
வீரியத்தைத் தடுத்திடுவோம்!
அரசு சொல்வதை – நாம்
அக்கறையோடு கேட்டு,
அனைவருமே தடுப்பூசி,
அவசியம் போட்டிடுவோம்!
இரவுபகல் பாராமல்,
மனித உயிர் காக்கும் – நம்
மருத்துவர்கள்!
களப்பணியாளர்கள்!
காவல்துறையினர்!
இன்னும்,
பற்பல துறையினரும்
அயராது உழைக்கின்றார்கள்.
நன்றி சொல்வோம்!
நன்றி சொல்வோம்!!
நாளெல்லாம் – நாம்
அவற்கே!
ஜெய்ஹிந்த்!!

எழுதியவர் : மா.க.ச.முருகானந்தம் பி.ஏ (4-Jun-21, 8:11 pm)
சேர்த்தது : manikandan
பார்வை : 8328

மேலே