பள்ளிக்கூடம்

பள்ளி எனும் நந்தவனத்தில்
கல்வி என்னும் தேனை வழங்கும்
மலர்களாக ஆசிரியர்கள்
தேனினை பருக வரும்
தேனீக்களாய் மாணவர்கள்
கொரோனா வைரஸ் என்னும்
கொடியவனின் கொடூர ஆட்டத்தால்
நந்தவனமாக இருந்த நம் பள்ளிகள்
பாலைவனமாக மாறியதே
தேனீக்களாய் மாணவர்கள் சுற்றி
வந்த வகுப்பறைகள் வெற்று
தேன்கூடாய்.....

எழுதியவர் : ஜோதிமோக (6-Jun-21, 1:06 pm)
சேர்த்தது : ஜோதிமோகன்
Tanglish : pallikoodam
பார்வை : 41

மேலே