மகா கேவலம்

கிரீட கிருமி தன்னையே மாற்றியவாறு
கிடுகிடுக்க செய்து வலம் வருகிறது
ஆயுத பலங்கொண்ட நாடுகள்
அஞ்சி நடுங்கியே பதுங்கிய நிலையில்
அனைத்துக்கும் காரணமோ
அறிவியலால் உருமாற்றிய உணவுகள்
அகிலத்தை வசப்படுத்த நினைக்கும்
அர்ப்ப எண்ணங்கொண்ட தேசத்தினர்
ஆபத்தின் விதையை பூமி மீது
கிரீமியின் வடிவில் தூவியதால்
எங்கும் பிணக்குவியலால் ஓலங்கள்
பணம் மட்டுமே முதன்மையென
பாதக செயல்களை கட்டவிழ்த்துவிட்ட
செங்கொடி ஏந்திய நாட்டினரின்
சீழ்பிடித்த செயலை சீயென எதிர்க்க
திராணி அற்ற நாட்டினருக்கெல்லாம்
கூட்டமைப்பு உள்ளதே மகா கேவலம்.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (7-Jun-21, 5:55 pm)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : maga kevalam
பார்வை : 51

மேலே