புதுவை முதல்வர் நரங்கசாமி அவர்களுக்கு வாழ்த்துக்கவி

இவர் புதுவையில்
தாமரையை உதயம் ஆக்கிய உதயசூரியன்
பதவியேற்றதும் முதியோர்
உதவித் தொகையை உயர்த்திய முதியசூரியன்

புதுவையை புதுப்பிக்கப்
பிறந்தப் புதிய சூரியன்
ஏழை மக்களின் இருளை
நீக்க வந்த மதிய சூரியன்

இவர்
ஏ .எம் பி .எம். பாராது
மக்க்கள் குறை
கேட்கும் சி.எம்
அரசியலில் யாருக்கும்
அஞ்சாத சீயம் ( சிங்கம் )

இவர் திறனை
அறிந்த சனங்கள் இவரை அரியாசனம் ஏற்றியது

முகத்தைப் பார்த்து
பேசுவோர் மத்தியில் இவர் இதயத்தைப் பார்த்து பேசுபவர்

இவரால்
புதுவை மாநிலம்
புது மா நிலமானது

இவர்
ஆ ச்சீ என்றிருந்த
அரசை மாற்றி
நல் ஆட்சி கொடுப்பவர்

பணங்களை சேர்த்து வைக்கும் முதல்வர்களுக்கு மத்தியில்
இவர் ஏழைகளின் மனங்களை சேர்த்து வைத்தவர்

முதலை அமைச்சர்களுக்கு
மத்தியில் இவர் முதலமைச்சராய் வாழ்ந்து காட்டியவர்

வெற்றிலையில் மை
போட்டுப் பார்த்தால்
இவரின் எளிமை தான் தெரியும்

இவர் பேராசை பிடித்தவர்
ஆம் ஏழைகள் உயர வேண்டும்
என்று பேராசை பிடித்தவர்

எழுதியவர் : Kumar (10-Jun-21, 10:25 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 40

மேலே