மனிதம் வாழ்கிறது
ஊறிய அறிவை
ஊரறிய
மாணவர்களுக்காகத்
தானம் தருகிறான்
ஆசிரியன் ...
சேர்த்த செல்வத்தை
புண்ணியத்திற்காய்
எவரென அறிந்தே
தானம் செய்கிறான்
தர்மவான்...
உடல் உழைப்பை
ஊதியத்திற்காகத்
தானம் செய்கிறான்
உழைப்பாளி....
கொடுக்கக் கொடுக்க
ஊறும் இரத்தத்தை
யாரென அறியாமல்
தானம் தருகிறான்
குருதிக் கொடையாளி...
மண்ணுக்குள் போகுமுன்
கண்ணையும்....
தன்னையும் ....
தானம் செய்ய
யாருக்கோ....
பதிந்து வைக்கிறான்
மனிதன் ...
கொடையாளிகள்
இருக்கும் வரை
மனிதம்...வாழ்கிறது.
மரு.ப.ஆதம் சேக் அலி
களக்காடு.