அப்பாவின் நினைவுகள்

*அப்பாவின் நினைவுகள் ...*

பிள்ளை உண்டான
செய்தியைப் ... பிறருக்கும்
எட்டும்படி வைக்க
விதை போட்ட
விவசாயி ....

எட்டும் வரை
தோள் தந்தவன்...

எட்டு வரை
என் கதாநாயகன்...

எதையும் எட்டிப்பிடிக்கக்
கற்றுத் தந்த...தோழன்...

எட்டியதும்...
விட்டிப் பிடித்தாலும்...
அதையும் ஏற்கும் ... கோழை...

என்னவளைக்
கை பிடித்த பின்...
வேண்டாதவன் ...

எதற்கெடுத்தாலும்
ஆலோசனை சொல்வதால்
கேட்கக் கூடாதவன் ...

படுக்கையில்
விழுந்து கிடக்கையில்
எப்போது போகும் என
நினைக்க வைப்பவன் ...

இல்லாத போதே...
பார்க்க முடியாத
தெய்வமாய்
உணர நினைப்பவன் ...

இன்னும்
கொஞ்சம்...நன்றாக
நடத்தி இருக்கலாமோ...
என எண்ண வைப்பவன் ...

அதற்குள்
என் மகன் வந்து ...
என்னையும்
அது போல் நடத்த
ஆரம்பிக்கும் போது ...


இவை அத்தனையும்
உணர்ந்துகொண்டேன் ...

அப்பா...
நீ எங்கே?


மரு.ப.ஆதம் சேக் அலி
களக்காடு.

எழுதியவர் : PASALI (20-Jun-21, 7:51 am)
சேர்த்தது : PASALI
Tanglish : appavin ninaivukal
பார்வை : 94

மேலே