ஆண் தோழன்
சுற்றமும் நட்பும் மறந்த
எனை நீமட்டும் தேடிப்பிடித்தாயே!!!
மிதிவண்டியை எனக்காக மிதித்தாய்...
பாவடை கொக்கியும் கண்கோணாமல் சீர்செய்தாய்...
புத்தக சுமைகளை எனக்காக சுமந்தாய்...
இன்றுவரை என் மனச்சுமை களை...
கல்லா மண்ணா விளையாடிய திண்ணைகள் உன் நினைவூட்டுகிறது!!!
ஊரடங்கு வந்த போதும் உனை மீட்டு செல்வேன் என்றாய் அதனால்தான் ஊருக்கே ராஜாவா??
காரணம் சொல்லாமல் கலைந்து போக இது கனவும் அல்ல ....
காரணம் சொல்லி கலைந்து போக இது காதலும் அல்ல ...
கடைசி வரைக்கும் வரும் உண்மையான நட்பு இது ...