கரம் பிடித்துக் கொள்ள வரம்
திருமண நாள்.. அது
இனிய துணையினை
கரம் பிடித்துக் கொள்ள
வரம் ஒன்று கிடைத்த நாள்...
மாலைகளை மாற்றிக் கொண்டு
மனங்களைப் பகிர்ந்த நாள்...
இதயங்களுக்கும் வாசம் உண்டென
பூக்கள் குறிப்பெடுத்துக்
கொண்ட பொன்னான நாள்...
நிபந்தனையற்ற அன்பினை
ஒருவொருக்கொருவர்
வாரி வழங்க உடன்பாடு
செய்து கொண்ட நாள்...
இனிய திருமண வாழ்வில்
இனிக்கும் இனிமை
இன்னும் பல்கிப் பெருகட்டும்...
தனக்கென்று வாழ்வது கொஞ்சம்
துணைக்கென்று வாழும் நெஞ்சம்
என வாழ்க பல்லாண்டுகாலம்...
எல்லாம் வசந்த காலம்...
தொடரட்டும் அழகிய நாட்கள்...
பாலு அங்கிள் தம்பதியருக்கு
திருமண நாள் வாழ்த்துக்கள்...
👍😀💐🌹🙏