அடியது பற்று
வேரிலே
பழுத்த பலா
இனிக்கும்...
அடியிலே
இருக்கும் கரும்பும்
இனிக்கும் ...
அடிப்படை
கற்ற கல்வி
இனிக்கும் ...
அடித்தளம்
சிறந்த கட்டிடம்
பலக்கும் ...
அடி அடியாய்
வந்த பரம்பரை
சிறக்கும் ...
அடி அடியாய்
எடுத்து வைக்கும்
முயற்சி
வீண் போகாது...
இறை அடி...
பற்றிப் பிடித்தால்...
குறையெதும்
வராது.