கோரைப்பாய் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

கோரையின்பாய் நற்குணமாங் கூறரிய மந்தமறும்
கூரிய தேகங் குளிர்ச்சியுறும் - வாருலகில்
நன்னித் திரைகூடு நாடாது ரூட்சையிதை
உன்னிப் புவியில் உரை

- பதார்த்த குண சிந்தாமணி

இப்பாயில் படுத்தால் அக்கினி மந்தமும் சுரவேகமும் நீங்கும்; தேகக் குளிர்ச்சியும், நல்ல நித்திரையும் உண்டாகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Jul-21, 4:19 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 45

மேலே