இதய கோவில்
என் இதய கோவில்
திறந்தே இருக்கு
உன் வருகைக்காக ..!!
என் இதயத்தின்
மணியோசையும்
உன் பெயரை
சொல்லியே ஒலிக்குது ..!!
அம்மனாக நீ வந்து
அமர்ந்த பிறகுதான்
பூஜையெல்லாம் செய்து
என் இதய கோவிலின்
நடை அடைக்கப்படும் ..!!
--கோவை சுபா