நீயும் நானும்
உன் கரம் பிடிப்பேன் என்று
காதல் செய்த கள்வனால்
தூக்கி எறியப்பட்டாய்
வேண்டாத காகிதமாய்..!!
என் தேடுதல் வேட்டையில்
கிடைத்த பொக்கிஷம் அல்லவா நீ...
உன்னை தூக்கி எறிவேனோ?
இல்லவே இல்லை...
என்னை மகிழ்விக்கும் பட்டமாய்
உனக்கு அவதாரம் கொடுப்பேன்...
அதை தாங்கிப் பிடிக்கும்
காற்றாடி கயிறாய் நானிருப்பேன்...
கயிறோடு இணைந்த காகிதமாய்
வானில் உலா வருவோம்
கணவன் மனைவியாக
நீயும் நானும்...!!