மனைவி அடிமை அல்ல

மனைவி அடிமை அல்ல.

கணவன் வந்த பின்பே உணவு உண்பது, அவன் வந்த பின்பே உறங்குவது
எல்லாம் மனைவி கணவனுக்கு அடிமை என்ற அர்த்தம் அல்ல.

சற்று சிந்தித்தால் இரு செயற்பாடுகளும் உள்வாங்கி நிற்கும் நன்மைகள் தெரியும்.

1) கண்டவர்களோடு கூடி கண்டதெல்லாம் குடித்து
கண்டதெல்லாம் கண்ட நேரம் சாப்பிட்டு
கண் அயராமல் திரியும் அவனின்
உடம்பையும் தன் மாங்கல்யத்தையும்
காப்பாற்ற மனைவி வகுத்த அறிவு பூர்வமான ஒரு திட்டம்.
இல்லை என்றால் அவள் தினம் தினம் கணவனிடம் வேளா வேளைக்கு வீடு வந்து சாப்பிட்டு நேரத்துக்கு தூங்குங்களேன், உங்கள் உடம்பு என்னத்துக்கு ஆகும் என்று சொல்லி அவனின் கோபத்துக்கு ஆளாகா வேண்டி வரும்.
அன்புள்ள கணவனும் பாவம் அவள் எனக்காக
அங்கு சாப்பிடாமல்
தூங்காமல் கண்விழித்து
கிடப்பாளே என்று நினைத்து நேரத்துக்கு வீடு திரும்புவான். பிள்ளைகளுக்கும் அவன் முகம் தெரியும். அவனுக்கும் பிள்ளைகளின் முகம் தெரியும். குடும்பம் குடும்பமாக இருக்கும்.

2) கணவனோ மனைவியோ தங்களை சில இக்கட்டான நிலையில் இருந்து காப்பாற்றவும் உதவும். எப்படி?. எனக்கு இப்போ நேரமில்லை அவள் அங்கு பசியோடு சாப்பிடாமல் இருப்பாள் என்று சொல்லி கணவன் தப்பித்துக்கலாம். இதுபோலவே மனைவியும், அவரோ என் பிள்ளைகளோ நான் பக்கத்தில் நின்று பரிமாறா விட்டால் அவர்களுக்கு சாப்பாடு தொண்டையில் அடைத்து
விடும் என்று சொல்லி வாய் ஓயாமல் பேசும் பக்கத்து வீட்டு பார்வதி
அக்காவிடம் இருந்தும் தப்பித்துக்கலாம்.**

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

** What a load of b***s**t
rubbish என்பவர்கள்
எக்கேடு கெட்டால்
எங்களுக்கு என்ன.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (27-Aug-21, 9:46 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : manaivi adimai alla
பார்வை : 150

மேலே