என்னில் நீ காதலில் விழுந்து விட்டால்

வாசலில் நீ
---- தென்றலாய் வருவாயானால்
வழியெல்லாம் ரோஜா இதழ்களைத் தூவுவேன்
முத்துக்களை நீ
----உன் இதழ்களில் ஏந்தி வந்தால்
என் கவிதைப் புத்தகத்தில் அதை கோர்த்து வைப்பேன்
கனவு விழிகளை நீ
---- மெல்ல அசைத்தால்
நான் கற்பனை வானில் சிறகு விரித்துப் பறப்பேன்
என்னில் நீ
---- காதலில் விழுந்து விட்டால்
பின் என்ன உன் மூச்சோடு மூச்சாக நான் கலந்துவிடுவேன் !

எழுதியவர் : கல்பனா பாரதி (6-Sep-21, 3:53 pm)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 148

மேலே