எங்கும் தமிழ் எதிலும் தமிழ
எங்கும் தமிழ்
எதிலும் தமிழ்.
பார்த்தேன் பலர் முகம்,
பார்த்ததெல்லாம் தமிழர் முகம்,
பரந்ததே அவர்கள்
உள்ளம் - இல்லையேல்!
" யாதும் ஊரே யாவரும் கேளீர்"
என உரைத்திருப்பாரோ?
வந்தவரெல்லாம்
உயர்ந்திடுவாரோ?
உயரவேண்டும் தமிழ்,
உலகமும் உயரவே,
இறைவனை மறைத்து,
இறை உண்மை நிறுத்தி,
இரண்டடி இரண்டடி,
இட்டுச் சென்றானே!
அவன் யார்?
அவன் பெயர் என்ன?
அவன் தமிழனன்றோ.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.