அன்னை ஏசி விட்டாள்

அன்னை ஏசி விட்டாள்

எனக்கு ஒரு வீடு
இல்லை என்றா?
காசு பணம்
சேர்க்கிறாய் நீ !

உன்னப் படைத்த
நான் தான்,
அவனையும்
படைத்தேன்,

பார் அங்கு ,
" உண்ண உணவில்லை
உடுத்த உடையில்லை
உறங்க இடமில்லை "

யாருக்கு வேணும்?,
உன் தங்க நகையும்
தங்கத் தேரும்,
எனக்கு வேண்டாம்,
உன் பாலும் பழமும்,

அவனிடமே
கொடுத்துவிடு,
அப்புறம் வா என்னிடம்,
இப்போ நீ இங்கிருந்து
போய்விடு,
என் கோபம்
தணிந்திடவே.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (13-Sep-21, 1:22 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 52

மேலே