நம் அப்பாவுக்கு நிகர் நம் அப்பா மட்டுமே 💐💐

அப்பா என்பது வெறும் வார்த்தை அல்ல..
நம் வாழ்க்கை..
நம் நம்பிக்கை..
நம் தைரியம்..👍👍
நடிக்கத் தெரியாத நம் முதல் நாயகன்..

அளவு கடந்த அன்பைக்
கண்டிப்பு என்னும் கடிவாளமிட்டு
நாளும் நம்மை செதுக்கும் சிற்பி..

தாயின் கருவறையோ பத்து மாதம்..🤰
ஆனால் தந்தையின்
அரவணைப்பு என்னும் கருவறையோ
அவர் ஆயுள் உள்ளவரை..

உங்கள் பெயரில் நான் அடையாளம்
காண்கிறேன் என்பதில் பெருமை.
ஏன் கர்வமும் கூட..😏😏

என் வாழ்வு பூத்துக்குலுங்க
நித்தம் நீ உழைத்துக் கொண்டிருக்கிறாய்..
உழைத்து உழைத்து உரமேறிக்
காய்த்துப் போன உன் உள்ளங்கை🤲
தாயின் பிரசவத் தழும்புகளுக்கு
சற்றும் குறையாதவை..

கைப்பேசியில் அம்மாவின்
ஆயிரம் உரையாடல்களும் நீ கூறிடும்
'சொல்லும்மா எப்படிம்மா இருக்க'
என்பதில் அடக்கம்..

ஆம் அதிகம் பேசாத
செய்ததை சொல்லிக்காட்டாத
சொக்கத்தங்கம் தான் என் அப்பா..💎💎

அன்று உங்கள் தோள்களில்
அமர்ந்து கொண்டு
குச்சிமிட்டாயை சப்பியவண்ணம்🍭
வேடிக்கை பார்த்து கொண்டு வந்தேனே
அதில் கிட்டிய சுகம்
இன்று விமானங்களில் பறந்து சென்றாலும் கிட்டவில்லை..

என் திருமணத்தில் விழியோரம்
ததும்பும் நீருடன் பெருமிதத்தில்
எனை நீங்கள் நோக்க,
நானோ சிறு குற்ற உணர்வில்
உங்கள் முன்னால்..😔😔
ஆம் உங்கள் அத்தனை வருட உழைப்பையும் கொண்டு
செல்கின்றேனே என்று..

அம்மாவின் அன்பை நித்தம்
நாம் உணரலாம்..❤❤
அப்பாவின் அன்பை அவர் நம்முடன் இல்லாத போதுதான் உணரமுடியும்..😔😔

நம் கண்முன்னே வாழும்
தெய்வம் தான் அப்பா..🙏🙏
தனக்கென எதுவும் செய்துகொள்ளாமல்
நமக்காகவே எல்லாம்
செய்பவர் தான் நம் அப்பா..

ஆயிரம் உறவுகள்
அன்பைப் பொழிந்தாலும்
அப்பாவின் இடத்தில் வேறு யாரையும்
வைத்துப் பார்க்க முடியாது..

நம் அப்பாவுக்கு நிகர் நம் அப்பா மட்டுமே💐

எழுதியவர் : புனிதா சரவணன் (29-Sep-21, 6:14 pm)
சேர்த்தது : புனிதா சரவணன்
பார்வை : 3759

மேலே