பெற்றோர்
உயிர் இருக்கும் வரை நான் தேடினேன்
உள்ளத்தின் நினைவும் இறைவனும் நீயே!
உறுப்புகள் எல்லாம் உமது அங்கமே !
உலகின் அன்பிலே உமது சிகரமே!
அடைகாக்கும் எங்கள் அழகின் தேவதை
அண்டத்தின் வழிவகுக்கும் இல்லற தேவன்
அகண்ட உலகில் அருமை பிறவி
ஆக்கத்தின் பொருள் ஆளுமையின் சிறப்பு!
எங்கள் நினைவில் பிரியாத முத்திரைகள்
ஏற்றம் தாழ்வினை காணாத உள்ளங்கள்
எங்கள் கல்வியின் மூத்த ஆசிரியர்கள்
எங்கள் வாழ்வின் ஒளிதரும் இறைவன்!
இனிமை சுகத்தின் மக்களின் சொர்கங்கள்
இல்லற காக்கும் சுகாதார மையம்
இனிமை உலகின் உயர்ந்த மாயம்
இனியர் வாழ்த்திட இலக்கண குவியல்கள்.
கணக்கற்ற எண்ணங்கள் சுமந்த
காலத்தின் ஏற்றவாறு நிரவி
கடமையின் பற்று தொழுது
கருணையின் மக்களின் அமுத்துசுரபி.
தெளிவான உள்ளம் ஊற்றுபோல் உறவு
தெய்வத்தன்மை கொண்டு தேங்கிடச் செய்து
தென்றல் போல் அனைத்து முதன்மையானார்
தொதள்ளுதமிழ் முதற்கொண்டு இனித்தன வாழ வகுத்தார்
மக்களின் முன்னுரிமை கொண்டு முனைவராக
மக்களின் பாதுகாத்து நல்லவழி பரிந்துரைத்து
மனந்தளர அனைத்து வையகத்தில் வழிகாட்டியாக
மதியின் சுடரால் மலர்ந்த மக்கட்செல்வம்.
எண்ணற்ற எண்ணங்கள் எழுதிய மனதில்
ஏற்றம் கண்டு எழிலான மனதில் புன்சிரிப்பால்
மக்கட்செல்வம் உழைப்பின் பெயர்கொண்டு
மலர்ந்து மங்களமாக மறைந்தார் மண்ணில்
உயிர் இருக்கும் வரை நான் தேடினேன்
உறவாட உறவியில்லை உற்றாருமில்லை
உயிர்தந்த இறைவனுக்கு நிலைகொண்டார் என்னில்
உள்ளதால் நினைவுகளை எழுதுகிறேன் ஏட்டில்.