மஹானே நிற்க

காந்திமஹானே சற்று நிற்க..

சிறைக்குள்ளே அனுப்பினான் ஆங்கிலேயன்
மண்ணறைக்குள்ளேயே அனுப்பினான் இந்தியன்
பணம் எல்லாம் உன் படம்தான்
நீ நினைக்கலாம் பெருமை என்று
ஒருபோதும் இல்லை...
உன்னை பதுக்கி வைத்தால்
நீ காட்டி கொடுக்கமாட்டாய்
அதனால்தான் உன் படத்தை போடுகிறோம்..!
ஏழையின் ஆடையை கண்டு
கதர் ஆடை நீ அணிந்தாய் அன்று
எஜமானர்கள் ஆடையானது இன்று..!
உனக்கு தெரியுமா....
காந்தி ராஜ்யம் என்று சொல்லி
பிராந்தி ராஜ்ஜியம் ஆக்கிவிட்டார்கள்..!
நீ கட்சியை கலைக்க சொன்னவன்...
நாங்கள் உன்பெயரிலேயே
கட்சிகள் தொடங்கினோம்..!
நீ உண்ணாவிரதம் இருந்தால்
ஆட்சியாளர் பதறினார்கள்..
நாங்கள் உண்ணாவிரதம் இருந்தால்
பொதுமக்கள் பதறுகிறார்கள்..!
காலம் மாறிவிட்டது
ஆண்டில் ஒருநாள்
உன்னை நினைவிக்கிறோம்
நீ ஆண்டிபோல்
வாழ்ந்ததாலோ என்னோவோ..?
அந்த நாள் இன்று..!
வழக்கம் போல் நினைத்து விட்டோம்..!

எழுதியவர் : குமரி பையன் (2-Oct-21, 4:20 pm)
பார்வை : 819

மேலே