பூச்சியம்

பூச்சியம்

இறைவன்
இடத்துக்கும்,
என் இடத்துக்கும்
வெகு தூரம்.

இதை எண்ணி,
நான் கவலைப்
படுவதில்லை.

இறைவனிடமும்
உண்டன்றோ,
What's app, Viber
.......... எல்லாம்.

செய்ய வேண்டியது
Dial 0000000000,
எடுத்திடுவான் 0
நேரத்தில்,
பேசிடுவான் 0
நிமிடம்,
பேசியதும் 0
விடயமன்றோ!

எல்லாமே 0 தானா
என்று கேட்டால்,
அவன் வீட்டு
விலாசமும் 0 தான்.

சொல்லியது நான்
இல்லை,
சொன்னவன்
கண்ணதாசனன்றோ!
" பூச்சியத்துக்குள் ஒரு
இராச்சியத்தை ஆண்டு கொண்டு...''
இந்தப் பாடல் வரிகள்
ஞாபகம் உண்டோ?

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (9-Oct-21, 11:45 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 69

மேலே