மலராய்
மலராய்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
நான் மலராய் பிறந்திருந்தால்
மங்கை உந்தன் கூந்தலிலே ஒரு நாள் வாழ்ந்திருப்பேன்..
நான் மலராய் பிறந்திருந்தால்
கடவுள் உன் கழுத்தினிலே
மாலையாய் வீழ்ந்திருப்பேன்..
நான் மலராய் பிறந்திருந்தால்
காதலி உன் நெஞ்சோடு கணப்பொழுது உரசிருப்பேன்..
நான் மலராய் பிறந்திருந்தால்
மாணவா உன் அறிவியலில் உலந்தும் வாழ்ந்திருப்பேன்..
நான் மலராய் பிறந்திருந்தால்
தேர்தலிலே வென்றவனை தேடிச்சென்று இணைந்திருப்பேன்..
நான் மலராய் பிறந்திருந்தால்
மருத்துவத்தில் பொடியாகி வைத்தியமும் செய்திருப்பேன்..
நான் மலராய் பிறந்திருந்தால் இறந்தவனின் உடலோடு வருந்துவதில் பங்கெடுப்பேன்..
வாழுகின்ற ஒருநாளில் வாய்ப்பெல்லாம் உனக்கென்றால்
மனிதர்களின் மதிப்புயர
வேறென்ன மீந்திருக்கு..
க.செல்வராசு.....
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷