பயங்காட்டும் பலவகை - வெளிவிருத்தம்

இன்னலைத் தீர்த்திட அண்ணலாய் வந்திடு - இறைவா
மின்னலாய் பற்றிய இன்னலும் நீங்கிட - இறைவா
மன்னனாய் என்னுள் மனதில் உயர்ந்தாய் - இறைவா
நன்னிலை பெற்றுலும் என்னை வழிநடத்து - இறைவா ---- (1)

முட்டையின் வடிவம் புவியில் எங்கும் - கோளமாய்
அட்டையும் போகையில் தட்டினால் சுருளும் - கோளமாய்
வட்டமாய் தெரியும் கோள்கள் சுழலுமே - கோளமாய்
நெட்டை செயற்கைக் கோளும் சுற்றவேண்டும் - கோளமாய்.---- (2)

ஒருக்கோள் ஒளியில் வலுவாய் நனிஅணலாய் - கதிரவனாய்
இருக்கும் கோள்களை இயக்கியே தாயெனவே - கதிரவனாய்
கருக்காமல் தினமுமே எரிந்ததாய் தொலைவிலே - கதிரவனாய்
உருகாமல் சிதறாமல் வெடிக்காமல் நிலைத்ததே - கதிரவனாய் --- (3)

மரமெல்லாம் செழித்ததாய் உயந்திடவே பாதங்கள் - வேராம்
உரமதை மரத்திற்கு உணவிட்டால் வாயெனவே - வேராம்
கருக்கான வாளினால் அறுத்தாலும் கலங்காதது - வேராம்
தரிசான மண்ணினை செரித்தே வளமாக்கிடும் - வேராம். --- (4)

மக்களை நிருவாகிக்க எழுதிய புத்தகமாம் - சட்டம்
சிக்கலை உருவாக்கி பெரியதாய் சேதமாக்குதே - சட்டம்
குக்கலைபிடித்து நாவிக்கமண் டலத்திலே அடைத்ததாய் - சட்டம்
எக்காலத்திலும் திரவியம் ஈட்டிவே கற்றனரே - சட்டம் --- (5)
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (1-Nov-21, 7:55 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 30

மேலே