ஆறாம் விரல் கவிஞர் இரா இரவி
ஆறாம் விரல் ! கவிஞர் இரா .இரவி !
ஆறாம் விரல் என்பது அற்புதமான எழுதுகோல்
அகிலம் முழுவதும் முன்னேற்த்தின் காரணியானது !
ஆதிவாசியாக அலைந்திட்ட இரண்டுகால் மிருகத்தை
அன்பும் பண்பும் மிக்கவனாக நாளும் மாற்றியது !
--
கணினி அலைபேசி வந்திட்ட காரணத்தால் தான்
கையால் எழுதுவது குறைந்தாலும் அடிப்படையானது !
எழுதி எழுதி பழகிய கரங்களுக்குத்தான் உடன்
எழுதிட வரும் கணினியிலும் அலைபேசியிலும் !
அன்று காதலர்கள் கடிதம் எழுதிட உதவியது
அண்டம் முழுவதும் காதல் பரவிடக் காரணமானது !
நாகரீக மனிதனாக மாற்றி செம்மைப்படுத்தியது
நல்ல செய்திகளை உடன் அறிந்திட உதவியது !
கலை இலக்கியம் இன்றும் வாழ்ந்திட உதவுவது
கலைஞர்கள் இன்றும் மிளிர்ந்திடக் காரணமானது !
அறிவியல் அறிஞர்கள் புதியன கண்டுபிடிக்க உதவியது
அறிவியல் சாதனைகள் நிகழ்த்திட துணை நின்றது !
எழுத்தாணியில் தொடங்கி படிப்படியாக வளர்ந்தது
எண்ணிலடங்கா நூல்கள் உருவாகிட உரு கொடுத்தது !
இன்றளவும் பலருக்கு உற்ற துணையாக உள்ளது
இன்றைய மாணவர்களுக்கும் உறுதுணையாக இருப்பது !
நண்பர்கள் விரும்பி பரிசளிக்கும் நல் கொடையானது
நண்பர்கள் பலரை இணைப்பதற்கு துணை நிற்பது !
ஆறாம் விரலாகவே சாதனையாளர்களுக்கு உள்ளது
இருவிரல் துணையுடன் இமாலய சாதனைகள் புரிவது !