கவிதையை முறை செய்
இரண்டு வரியானா லென்னக் குறளில்
எழுதிக் கவிதையில் சேர்
மூன்று வரியா கவிருந் தாலென்
ஊன்றிடு ஆசிரி யப்பா
வென்றிடு கவிஞர் வரிசை முன்னே
நான்கு வரியானால் நல்லதோர் வெண்பாவில்
ஆன்ற வெதுகையுடன் மோனையும் -- தோன்றும்
தனிச்சொல்லொன் றைச்சேர்த் தமைப்பாய் யிசையில்
இனியவெண்பா வாகுமாம் நேர்
வாணிமுரு கில்லாத் தமிழாகா வொன்றுமே
கோணாத் தமிழைநீ யோது
மதமார்க முண்டுத் தமிழுக் குமறவாதே
இந்துவென்ற ழைப்பாராம் கேள்