தயக்கம்

தயக்கம்..

வா என்றது
உலகம்,
போக மறுத்தது
மனம்,
ஏன் என்றது?
உலகம்.

உருட்டி விடுவாய்
என்னை நீ,
உருளெட்டுமென்று!
பார்த்து மகிழ்வாய்
அதை நீ,
என்றது மனம்.

உருண்டு எழுந்தால்
வாழ்வு,
இல்லையேல்!
அதற்குப் பெயர்
சாவு, என்றது
உலகம்.

துணிந்தது மனம்,
பறந்து திரிந்தது
உலகெல்லாம்,
உண்டு உண்டு
உன்னிடம்,
பார்ப்பதற்கு உண்டு
இன்னும் பல காட்சி.

நன்றி சொன்னது
மனம்,
உலகம் விடுத்த
அழைப்பிற்கு.

ஆக்கம்
சண்டியூர் பாலன.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (16-Nov-21, 7:58 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : thayakkam
பார்வை : 91

மேலே