நகைச்சுவை துணுக்குகள் 36

நான் என் கல்யாணத்திற்காக எந்தப்பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து என் பெற்றோரிடம் காட்டினாலும், என் அம்மாவுக்கு அந்தப் பெண்ணைப்பிடிப்பதில்லை,

நீ உன் அம்மாவைப்போலவே இருக்கும் ஒரு பெண்ணை கூட்டிவந்து காண்பியேன்.

நான் அதையும் செய்து பார்த்துவிட்டேன். ஆனால் அந்தப்பெண்ணை என் அப்பாவுக்குப்பிடிக்கவில்லை.
*****************
அம்மா, உன் தலையிலே முடி நரைக்க ஆரம்பிச்சுட்டுதே. அது ஏம்மா?

அதுவா, நீ பொய்சொல்லும்போதோ, இல்லே நான் சொல்றதைக்கேட்காம அடம் பிடிக்கும்போதோ, அந்த மாதிரி என் முடி வெள்ளை ஆயிடும்.

அப்படின்னா, நீ பொய்சொல்லிண்டு, உன் அம்மா பேச்சை கேக்காம அடம் பிடிப்பியா?

ஏண்டி, என்னைப் பாத்து அப்படிக் கேக்கறே?

இல்லே, பாட்டி தலை முழுசும் நரைச்சிப் போயிடுத்தே, அதான் கேட்டேன்.
********************
அவன்: குருஜி, நான்தப்பு செஞ்சேங்கிறதை எப்படி கண்டுபிடிக்கிறது?

குரு: நீ உன் ஒயிஃப் செஞ்ச ஒரு தப்பை கண்டுபிடிச்சி சொல்லு. அவ நீ மாத்திரம் இல்லே, உன் வம்சத்துலே அத்தனைபேரும் செஞ்ச எல்லா தப்பையும் ஒண்ணு விடாம அடுக்குவா. அப்ப நீ தெரிஞ்சிப்பே.
**************
அந்த அப்ளிகேஷன் பாரத்துலே ஒரு கேள்வி “ உங்களுக்கு ஏதாவது நெருக்கடி நேர்ந்தால்( In case of emergency) யாரை தொடர்பு கொள்ள வேண்டும்” என்று இருந்தது.

நான் “டாக்டரை” என்று எழுதினேன்.

எழுதியவர் : ரா. குருசுவாமி ( ராகு) (17-Nov-21, 7:53 am)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 49

சிறந்த நகைச்சுவைகள்

மேலே