பாட்டியைப் பாரு
பாட்டியைப் பாரு.
சும்மா சும்மா
சாப்பிடாதே,
சோம்பேறி
ஆகிடுவாய்.
சும்மா சும்மா
சாப்பிடாதே,
உன் உடலுக்கு
ஆகாது,
உன் பணத்துக்கும்
ஆகாது.
பாட்டியைப் பாரு,
பஞ்சத்தை பார்த்தவள்!
பறந்தே திரிகிறாள்,
பம்பரம் போல்
சுழலுகிறாள்,
சும்மா சும்மா
சாப்பிடாதே,
சோம்பேறி என்ற
பெயர் வாங்கிடாதே.
ஆக்கம்
சண்டியூர் பாலன.