அருமையான கவிதை
✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️
*கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️
கணவனுக்கு
மனைவி
சோறு போடும் அழகை
தொலைக்காட்சி
நாடகத்தில்
பார்த்து
ரசித்துக் கொண்டிருக்கிறாள் கணவனுக்கு
சோறு போடாமல்....!
💤💤💤💤💤💤💤💤💤💤💤
சாப்பிட மறுத்தக்
குழந்தைக்கு
தாய்
நிலாவைக்காட்டி சோறூட்டுகிறாள்
சினம் காட்டி சோறூட்டுகிறாள்
சிரிப்புக்காட்டி சோறூட்டுகிறாள்
ஆடிக்காட்டி சோறூட்டுகிறாள
பாடிக்காட்டி சோறூட்டுகிறாள்
நடந்துகாட்டி சோறூட்டுகிறாள்
ஓடிக்காட்டி சோறூட்டுகிறாள்
குழந்தை
ஏழு மணிக்கு
தூங்கிவிடும் என்றல்ல..... தொலைக்காட்சியில்
தொடர் நாடகம்
தொடங்கிவிடும் என்று....!!!
💤💤💤💤💤💤💤💤💤💤💤
"ஒரே வகை உணவை
ஒவ்வொருநாளும்
சாப்பிடுவதால்
சரியாக
சாப்பிட முடியவில்லையே "என்று வருத்தப்படுகிறாயே...!
ஒரு வேளை
உணவைக் கூட
சரியாக
சாப்பிட முடியாதவர்கள்
இந்த நாட்டில்
எத்தனை எத்தனை பேர்...?
💤💤💤💤💤💤💤💤💤💤💤
"மாப்பிள்ளை
பிடித்திருக்கிறதா ?" என்று
தாய் கேட்டால் சம்பிரதாயத்துக்காக...
மகள் சொன்னாள்
"மாப்பிள்ளை
பிடித்திருக்கிறது" என்று....
அவளும்
சம்பிரதாயத்திற்காக.....!
*கவிதை ரசிகன்*
✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️