அருமையான கவிதை

✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️

கணவனுக்கு
மனைவி
சோறு போடும் அழகை
தொலைக்காட்சி
நாடகத்தில்
பார்த்து
ரசித்துக் கொண்டிருக்கிறாள் கணவனுக்கு
சோறு போடாமல்....!

💤💤💤💤💤💤💤💤💤💤💤

சாப்பிட மறுத்தக்
குழந்தைக்கு
தாய்
நிலாவைக்காட்டி சோறூட்டுகிறாள்
சினம் காட்டி சோறூட்டுகிறாள்
சிரிப்புக்காட்டி சோறூட்டுகிறாள்
ஆடிக்காட்டி சோறூட்டுகிறாள
பாடிக்காட்டி சோறூட்டுகிறாள்
நடந்துகாட்டி சோறூட்டுகிறாள்
ஓடிக்காட்டி சோறூட்டுகிறாள்
குழந்தை
ஏழு மணிக்கு
தூங்கிவிடும் என்றல்ல..... தொலைக்காட்சியில்
தொடர் நாடகம்
தொடங்கிவிடும் என்று....!!!

💤💤💤💤💤💤💤💤💤💤💤

"ஒரே வகை உணவை
ஒவ்வொருநாளும்
சாப்பிடுவதால்
சரியாக
சாப்பிட முடியவில்லையே "என்று வருத்தப்படுகிறாயே...!
ஒரு வேளை
உணவைக் கூட
சரியாக
சாப்பிட முடியாதவர்கள்
இந்த நாட்டில்
எத்தனை எத்தனை பேர்...?

💤💤💤💤💤💤💤💤💤💤💤

"மாப்பிள்ளை
பிடித்திருக்கிறதா ?" என்று
தாய் கேட்டால் சம்பிரதாயத்துக்காக...
மகள் சொன்னாள்
"மாப்பிள்ளை
பிடித்திருக்கிறது" என்று....
அவளும்
சம்பிரதாயத்திற்காக.....!

*கவிதை ரசிகன்*

✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️

எழுதியவர் : கவிதை ரசிகன் (26-Nov-21, 10:32 pm)
Tanglish : arumaiyana kavithai
பார்வை : 157

மேலே