காத்திரு விழித்திரு
எல்லாம் இங்கு மாறும்
உன் கவலையும் ஒர் நாள் மறையும்
எது வேண்டுமானாலும் நடக்கட்டும்..
இங்கு துன்பமும் கஷ்டமும் உன் நிழல் என தொடரட்டும்..
மனம் தளராதே
விடியல் ஒன்று விரைவில் உன்னைத் தீண்டும்....
அன்று துயரநிழல் அது காணாமல் விலகும்...
வழியும் கண்ணீர் எல்லாம் உன்னுள் புதைந்து கிடக்கும் கனவை வளர்க்கும் தண்ணீர் என கொள்..
ஈசன் படைப்பில் நாள் மட்டுமே இருக்கும் ஈசலுக்கும் கூட நல் வாழ்வு உண்டெனில்..
மகத்தான உன்னை அவன் மறப்பதேது..jQuery17102942997480238072_1640049303930!!
நம்பிக்கை அது கொள்..
இங்கு எதுவும் எப்பொழுதும் காரணம் காரியம் இன்றி நடப்பதில்லை
என தெளிவு கொள்..
காத்திரு..விழித்திரு.. நிச்சயம் இந்த புவிதனில் உன் எண்ணக் கருவை உருவாக்க வரும்
ஒர் நாள்..
என்றும்..என்றென்றும்..