கால நேரம்
எதையும் கால நேரம் பார்த்து
செய்ய வேண்டும் என்பார்கள்
ஏனென்றால் ...
நாம் எல்லோருமே
காலத்தின் கட்டுப்பாட்டில்தான்
நடமாடி கொண்டு இருக்கிறோம்...!!
காலம் ஒருபொழுதும் பேசாது
ஆனால் மனிதனின்
எல்லா பிரச்சனைகளுக்கும்
காலம்தான் பதில் சொல்லும் ...!!
பொறுமையாக காத்திரு மனிதா
எதற்கும் வீண் கவலை வேண்டாம்
விதைத்தவனுக்கு தெரியும்
அறுவடை காலம் எதுவென்று ...!!
--கோவை சுபா