காட்டுத்தீயும் மூன்று ரோஜாக்களும் - 15 இறுதிப்பகுதி

காட்டுத்தீயும் மூன்று ரோஜாக்களும் - 15 (இறுதிப்பகுதி)

பாகம் பதினைந்து
=================

(ஒரு புது புரஜக்ட்.. அதில் கலக்க மூவர் கிளம்பி செல்கின்றனர். இவர்கள் எடுத்து அனுப்பிய முதல் வீடியோ ஒளிபரப்பப்பட்டு தமிழ்நாடே அதிர்ந்து போய் இருந்தது. இளமதி டீமுடன் ப்ளூகிராஸும் சேர்ந்து கொண்டது. கூடவே இருந்த வருண், அவனது காலேஜ் நண்பர்கள் பலரை அழைந்திருந்தான். காட்டுத்தீ, கஞ்சா செடி என அடுத்தடுத்த செய்திகளால் பலரது பேவரேட் சேனலானது இளமதி. அதே நேரம் வருணுக்கு அடிபட அவன் ஆஸ்பெட்டலில் அட்மிட் ஆகி குணமடைந்து வருகிறான். சாருமதிக்கு பல வெளிநாட்டு, உள்நாட்டு சேனல்கள் வாழ்த்து தெரிவித்தன. ஆனால் ஒரு உள்நாட்டு தொலைக்காட்சி இளமதி டிவி மீது வழக்குத் தொடர்ந்தது. நாடு முழுவதும் செல்பிஸ் இளமதி என்னும் செய்தி டிரண்டாக, இளமதி காட்டுத்தீ டீம் திரும்பி போக முடிவெடுத்தனர். அதையேத்தான் சாருவும் சொன்னாள். ஆனால் வருணும், பிருந்தாவும் இரண்டு மூன்று நாட்கள் கழித்துப் போகலாம் என்று கூற, இப்போது ஆறுதல் அளிக்கும் ஒரு செய்தியாக 'ப்ளூகிராஸ்' அவர்களது உதவியில்லாமல் இத்தனை விலங்குகளைக் காப்பாற்றியிருக்க வாய்ப்பே இல்லையென அறிக்கை வெளியிட.. மீண்டும் நல்ல செய்திக்காய் டிரண்டாக ஆரம்பித்தது இளமதி டிவி. அவர்கள் இதுவரை எடுத்த நடவடிக்கைகள் அவர்களுக்கு வெற்றியைக் கொடுத்ததா இல்லையா? முடிவு தான் என்ன? வாருங்கள் பார்க்கலாம்)

(இறுதிப்பகுதி)

முற்றும் முழுதாய் அழிக்கப்பட்டது காட்டுத்தீ. யாராலும் நம்ப முடியாத நிகழ்வாய் இது அமைந்தது.

இக்காட்டுத்தீயினால் பல ஏக்கர் பரப்பளவுள்ள கஞ்சாத்தோட்டங்கள் மொத்தமாய் அழிந்துவிட்டதாக அரசாங்கம் அறிக்கை வெளியிட்டது.

இன்னும் மிகத்தீவிரமாக பரவி இருந்தால் மிகப்பயங்கர ஆபத்தினை விளைவித்திருக்கும் என்பதை அனைவருமே ஒப்புக்கொண்டனர்.

இது எப்படிச் சாத்தியம் ஆனது என்று தமிழகத்தின், இந்தியாவின் அனைத்து டிவி நியூஸ் சேனல்களும், பல வித யூடியூப் சேனல்களும் ஆராய ஆரம்பித்தனர்.

அப்பொழுது மீண்டுமொரு வீடியோ 'இளமதி' சேனலில் ஒளிபரப்பாக உலகெங்கும் அது அடுத்த வைரலாக ஆனது.

அந்த வீடியோவின் மூலம் அந்தக்காட்டில் வாழ்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான பழங்குடி இன மக்கள் இந்த தீயை அணைப்பதில் முழு மூச்சாய் உதவி செய்தது தெரியவந்தது.

அவர்களை ஒருங்கிணைப்பதில் வருணின் பங்கே அதிகம். அவனும் அவனது கல்லூரி நண்பர்கள் சுமார் முப்பது பேரும் சேர்ந்து ஒரு பெரும்பணியை செய்திருந்தனர். அவர்கள் ஆற்றியது முற்கால போர் நடைமுறைகளுக்கு சிறிதும் குறைந்ததல்ல. அவர்கள் அனைவரும் சேர்ந்து பழங்குடி மக்களை முப்பது அல்லது நாற்பது பேர் கொண்ட குழுவாகப் பிரித்தனர். வெளியில் மலை மேலிருந்து கண்காணிக்கும் ஒரு மாணவர் குழு மூலம், எப்பகுதியில் தீ வேகமாகப் பரவுகிறது என்னும் செய்தி ப்ளூகிராஸ் நண்பர்கள் கொடுத்துதவிய 'வாக்கி டாக்கி' மூலம் தெரிவிக்கப்பட, அங்கு அதிக எண்ணிக்கையிலான குழு அனுப்பப்பட்டது.

அவர்களது முதல் பணி.. முடிந்தவரையில் தீ பரவும் இடத்திற்கு அருகில் செல்ல முடியும் தூரம் வரை சென்று அருகிலுள்ள மரங்களை வெட்டி அதன் பகுதிகளை அப்புறப்படுத்தி வேக வேகமாக வெற்றிடங்களை உருவாக்குவது தான். ஆரம்பத்தில் சுணக்கமாக காணப்பட்ட அவர்களது பணி.. மாணவர்களின் கத்தல், விலங்குகளின் கதறல் இவற்றைக் கண்டபின் சூடுபிடிக்க ஆரம்பித்தது.

இடையில் வருணுக்கும் மற்றும் சிலருக்கும் ஏற்பட்ட காயத்தால் சிறுது இப்பணி தொய்வடைந்தாலும் வெகு சீக்கிரமாய் வேகமெடுத்தது. ஆஸ்பெட்டலில் இருந்தே நன்றாக ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தான் வருண்.

வெற்றிடங்கள் சுற்றிலும் அதிகமாக அதிகமாக அவ்விடங்களில் தீயின் வேகம் குறைந்தது. தீப்பரவல் முற்றிலும் தவிர்க்கப்பட்டது.

ஒரு இடத்தில் இப்பணி நிறைவேறியவுடன், அந்த குழுக்கள் அப்படியே வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டன. குழுக்களின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட பகுதியில் கூடக் கூட அங்கு மரங்களை வெட்டும் பணியும், மரங்களை அகற்றும் பணியும் அதிவேகமாக நடக்கவும் தீ மெல்ல கட்டுக்குள் வர ஆரம்பித்தது.
ஆரம்பத்தில் அதிர்ச்சயடைந்த அரசாங்கம், அடுத்தடுத்து வந்த இவர்களது வீடியோக்கள் கண்டும், தீயின் பரவல் பற்றியும், தீ கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் பற்றியும் அவ்வப்போது அப்டேட் கொடுக்க ஆரம்பித்தது.
முதலில் இளமதி டிவி மீது கோபமாக இருந்தவர்கள் பின்பு அதன் செயலை பாராட்ட ஆரம்பித்தனர்.
அவர்களது ஒவ்வொரு வீடியோவும் கோடிக்கணக்கான பேரால் பார்க்கப்பட்டது, பகிரப்பட்டது, பாராட்டப்பட்டது.
மூவரும் பாராட்டு மழையில் நனைந்தனர். வேறு வேறு டிவி சேனல்கள் கூட இவர்களது பேட்டியை எடுத்து ஒளிபரப்பி தங்கள் பார்வையாளர்களைப் பெருக்கிக் கொண்டனர்.

நாட்டிலுள்ள அத்தனை பத்திரிக்கைகளும் அவர்களது வீட்டை நோக்கிப் படையெடுத்தன. இவர்களது குடும்பங்களும் பாராட்டு மழையில் நனைந்தனர். இளமதி டிவியின் மதிப்பு இதன்மூலம் பன்மடங்கு அதிகமானது.

இதுவரை வேண்டாமென்று ஒதுக்கி வைத்திருந்த பங்குச்சந்தையில் இளமதி டிவியை இறக்க முடிவெடுத்தாள் சாருமதி.

இதன் மூலம் வரும் பணத்தின் ஒரு பகுதியை இந்த நிகழ்வில் பெரும் பங்காற்றிய பழங்குடி மக்களுக்கு செலவளித்து அவர்களது வாழ்வாதாரத்தை அடியோடு மாற்ற சபதம் செய்தாள் சாரு.

அவர்களது எல்லா வீடியோக்களையும் வாங்க டிஸ்கவரி பல கோடி பேரம் பேசி.. மிக மிக அதிக தொகையில் வாங்கிக்கொண்டது.

பிகைன்டுவுட்ஸ் நிறுவனம் அவர்களுக்கென்ற தனிப்பட்ட பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்தது. பல முக்கியமான விஐபிக்கள் விழாவிற்கு அழைக்கப்பட்டனர். பல விஐபிக்கள் அவர்களாகவே விரும்பி இவ்விழாவில் பங்கேற்றனர். மூவருக்கும் "த்ரீ ரோஸஸ்" என்ற சிறப்பு விருது மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி' கையால் வழங்கப்பட்டது.

அவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சின்னவன், பூங்காவனம், மலர்விழி, பிருந்தாவனம், பிருந்தாவின் அம்மா, வருண், நீலாவதி ஆகியோர் இம்மூவரால் அழைக்கப்பட்டனர்.

இளமதியின் அதிபர் சாருமதிக்கு மிகுந்த பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. அம்மேடையிலேயே இவர்களுக்கு "ஒரு வருட சம்பளம் போனஸ்" என அறிவித்தாள் சாருமதி.
மூவருக்கும் பதவி உயர்வு அளிப்பதாகவும் தெரிவித்தாள். கூடவே இருந்து தனது அளப்பரிய பணியால் எல்லோரையும் கவர்ந்து இன்று காயங்களுடன் உட்கார்ந்திருக்கும் வருணுக்கு இளமதி டீவியில் ஒரு நல்ல பதவி வழங்குவதாக சாருமதி அறிவித்தாள்.

இதற்கிடையில் அடிக்கடி மிஸ்டு கால் கொடுத்து கொடுத்து டிஸ்டர்ப் செய்து மெசேஜ் செய்ய ஆரம்பித்து இப்போது நன்றாக பழகவும் ஆரம்பித்திருந்த தர்ஷினியின் வருங்கால ஹஸ்பன்டையும் அவள் விழாவிற்கு அழைத்திருந்தாள். அவன் வாயெல்லாம் பல்லாக விழாவிற்கு வந்து முழுவிழாவிலும் மிக சந்தோசமாகக் கலந்து கொண்டான்.

இந்திய அரசாங்கம் ஆளுக்கு ஒரு கோடி பரிசு அறிவித்தது. தமிழக அரசு ஆளுக்கு 50 லட்சம் பரிசு அறிவித்தது.

ஒரு வெளிநாட்டுச் சுற்றுலா நிறுவனம் 15 நாள் ஐரோப்பா டூரை இவர்களுக்குப் பரிசாக அறிவித்தது.

விழாவின் முடிவில் கூட்டுப்பிரார்த்தனை நிகழ்வு அரங்கேறியது. மீண்டும் இப்படியொரு காட்டுத்தீ வேண்டாமென உருக்கமாக அனைவரும் வேண்டிக் கொண்டனர்.

காடுகள் பாதுகாக்கப்பட வேண்டியவை.

காடுகளில் வாழ்ந்த வரை மனிதன் மனிதாக வாழ்ந்தான்.

இப்போது வாழ்வை தொலைத்து விட்டு நிற்கிறான்.. மீண்டும் உலகமே காடுகளாலாக மாறினால் நல்லது தான்..

காடுகளைப் பாதுகாப்போம்

புதிதாய் காடுகளை உருவாக்குவோம்..

(முற்றும்)

(தொடர்ந்து படித்து ஆதரவு கொடுத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றி..)

அ.வேளாங்கண்ணி

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (7-Jan-22, 11:14 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 123

மேலே