அவாவறுக்க லுற்றான் றளரானவ் வைந்தின் அவாவறுப்பி னாற்ற வமையும் – ஏலாதி 11

நேரிசை வெண்பா

அவாவறுக்க லுற்றான் றளரானவ் வைந்தின்
அவாவறுப்பி னாற்ற வமையும் - அவாவறான்
ஆகு மவனாயி னைங்களிற்றி னாட்டுண்டு
போகும் புழையுட் புலந்து 11

- ஏலாதி

பொருளுரை:

அவாவினை விடுவதற்குக் கருதியவன் உறுதி தளராமல் ஐம்பொறிகளின் வழிச்செல்லும் அவாவினைக் கெடுப்பானாயின் அவன் கருத்து மிகவும் நிரம்பும்;

மற்று அவன் ஐம்பொறி அவாவினைக் கெடுத்துக் கொள்ளானானால் அவ்வைம் பொறிகளென்னும் யானைகளால் அலைப்புண்டு அவற்றின் புழையாகிய புலமென்னும் வாயிலில் சென்று துன்புறுவான்.

கருத்து:

அவா வறுத்தலாவது ஐம்பொறி யடக்கமாகும்.

பொறிகளைக் களிறென்றமையின், அவற்றின் புலன்களை அக் களிறுகளின் துதிக்கைப் புழைகளென்றா ரென்க.

ஐம்புலன்கள் - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Jan-22, 9:55 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 39

மேலே