அடிமை சாசனம்
என் இனியவளே
இடையிடையே வந்து
உந்தன் "இடை" அழகை
காட்டி காட்டி
எந்தன் வேங்கை நடைக்கு
வேக தடைப்போட்டவளே..!!
உந்தன் கண்ணழகில்
என்னை கட்டிப்போட்டவளே...!!
எந்தன் சுதந்திர வாழ்க்கை
உனக்கு அடிமையென்று
"அடிமை சாசனம்"
எழுதிட வைத்தவளே..!!
நீ அடிக்கடி வெளியே
வந்து விடாதே
உந்தன் அழகின் மீது
பிறரின் கண் திருஷ்டி
பட்டு விடும்...!!
--கோவை சுபா